இனி டொரண்ட் வலைத்தளத்தை விஜயம் செய்யாதீர் : மீறினால் இது தான் தண்டனை!!

765

Torrent

ஆபாச வலைத்தளங்களை தடை செய்ததை தொடர்ந்து இந்திய அரசாங்கம் தற்போது டொரண்ட் வலைத்தளங்கள் மீது குறி வைத்துள்ளது. டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமாக தகவல்களை பகிந்துகொள்ளும் இணையதளங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமான வலைத்தளத்தை இனி பயனர்கள் விஜயம் செய்தாலோ அல்லது அதன் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்தாலோ அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும்.

மேலும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபதாரமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இந்த தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோர் மீது காப்புரிமைச் சட்டப் பிரிவு 63, 63-A, 65 மற்றும் 65-அ வின் படி தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.