ஈழத்தமிழர்கள் குறித்து சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு சீமான் கண்டனம்!!

594

Seeman

ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது என்ற இயக்குனர் சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கன்னா பின்னா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.

இதன் போது புதிய தமிழ் சினிமாக்களை ஆன்லைனில் ஏற்றி சினிமாவுக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று நினைத்தால் அருவருப்பாக உள்ளது, என சேரன் கூறினார்.

இது குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில், கன்னா பின்னா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் ஈழத்தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கேட்டவுடன் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அவர் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சேரன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.