நடுரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர் : கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்!!

1125

Sucide

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நபர் ஒருவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் சாலையில் குழி தோண்டிக் கொண்டிருந்தவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களது பணியில் மும்முரமாக இருந்ததால் நாங்கள் பார்க்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டவர் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அப்பகுதி மக்களிடம் அவரது படத்தை காட்டி விசாரித்து வருவதாக மண்டல துணை ஆணையர் மனோஜ் சர்மா தலைமையில் மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அனைவரும் பார்த்தும் பார்க்காமல் சென்றுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.