வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமான உற்சவம் 10ம் நாளான 01.09.2016 அன்று சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
இறுதிநாளன்று அடியார்கள் பால்செம்பு, காவடி, தீச்சட்டி போன்ற நேத்திக் கடன்களை நிறைவேற்றியதோடு, 27அடி ஐயனார் சிலைக்கு அடியார்களால் பால் அபிஷேகம் நிகழ்த்தப் பட்டது.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான ஐயனார் சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீதன்-