முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி!!

656

AIDS

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பொஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார்.

இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

அந்த சமயம், தமிழ்நாட்டில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 6 செக்ஸ் தொழிலாளர்களின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருந்தது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதித்தவர் நிர்மலா செல்லப்பா என்ற மருத்துவக் கல்லூரி மாணவிதான்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் (Micro Biology) அறிவியலாளர் மாணவியாக இருந்த அவருடைய இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் முதல்முறை. அது இந்தியாவிலும் எய்ட்ஸ் பரவியிருப்பதை உறுதிசெய்திருந்ததால் இந்தியா முழுவதுமாக பரபரப்புடன் பரவியது.

1985 ம் ஆண்டின் இறுதியில், நிர்மலா ஆராய்ச்சிக்கான தலைப்பு தேடும்போது, அவருடைய பேராசிரியரும் வழிகாட்டியுமான டாக்டர் சுனிதி சாலமன் ஹெச்.ஐ.வி. வைரஸ் பற்றிய தலைப்பிலே ஆராய்ச்சி மேற்கொள்வது புதிய முயற்சி, ஒரு சவாலாகவும் எதிர்காலத்தில் புகழாகவும் இருக்கும் என்று நிர்மலாவை வலியுறுத்தினார்.

ஆனாலும், அப்போது 32 வயதுடையவராக இருந்த நிர்மலா ஹெச்.ஐ.வி. ஆராய்ச்சியில் முழுதாக மூழ்குவதற்கு தயக்கம் காட்டினார்.