இந்து முன்னணி நிர்வாகி படுகொலை : இறுதி ஊர்வலத்தில் கலவரம் : 108 பேர் கைது!!

439

k

கோவையில் வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 108 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு நடந்தது. சசிகுமார் உடல் பிரேத பரிசோனை நடந்த கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திடீரென கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையின் உச்சகட்டமாக துடியலூரில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 3 கடைகள் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குலில் 4 போலீஸ் ஏட்டுகள் காயம் அடைந்தனர். கோவை மாநகர் மற்றும் துடியலூரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு தரப்பினர் திரண்டனர். வழிபாட்டு தலங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறிய அவர்கள் திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள்.

சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

kovai