வறுமையின் கொடுமை : தீயிற்கு இரையான 7 உயிர்கள்!!

593

dead

வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மணலியை சேர்ந்தவர் வேதகிரி (65) அவருடைய மனைவி ஜோதி (50) இவர்களுக்கு ஷூபா (26) ஜெபகனி (24) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

வேதகிரிக்கு கண் பார்வை பிரச்சனை பல நாட்களாகவே இருந்து வந்துள்ளது. பணம் இல்லாததால் சிகிச்சை பெறாமலே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த ஷீபாவுக்கு திடிரென மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வீட்டில் தங்காமல் அருகில் உள்ள தேவாலயத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தன் கண்பார்வைக்கும் மகள் மனநிலை பாதிப்புக்கும் மருத்துவம் பார்க்க பணமில்லையே என வேதகிரி மிகுந்த கவலையில் இருந்துள்ளார். மேலும் தன் இளைய மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற வருத்ததிலும் வேதகிரியும், ஜோதியும் இருந்துள்ளனர்.

இந்த மன உளைச்சல் அவர்களுக்குள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தூண்டியிருக்கிறது.

இநிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்த மண்னெண்யையை தங்கள் மேல் ஊற்றி கொண்டு வேதகிரி,ஜோதி,ஜெபககனி ஆகிய மூவரும் தீவைத்து கொண்டனர். அவர்கள் அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து பார்த்த போது மூவரும் தீயில் கருகி இறந்திருந்தனர்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.