பட்டப் பகலில் ரவுடி வெடிகுண்டு வீசிக் கொலை!!

700

m

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி ஜனா கொலை செய்யப்பட்டுள்ளார். குயிலப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜனா கொலை செய்தது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய ரவுடி ஜனாவை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான ரவுடி கும்பலும் மாறி மாறி மோதிக் கொள்வார்கள். வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக மணிகண்டன் கும்பலைச் சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

ஆஜராகிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, அவரை பின் தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியது.

இதில் ஜனா சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி.நரேந்திர நாயர் சம்பவ இடத்தில் நேரில்சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

m2