திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் திட்டத்தால் பொதுமக்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால் திருமணம் நிகழ்ச்சிகளும் தள்ளிபோடப்பட்டுள்ளது. அதையும் தாண்டி நடக்கும் திருமணங்களும் கையில் பணம் இல்லாத நேரத்தில் நன்றாக திட்டமிட்டே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட மாநிலம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதனை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.






