
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியாஸ் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி பஸ்ஸிற்கு சேதம் ஏற்படுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய குழுவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இன்று கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.





