கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது : சி.வி.விக்னேஸ்வரன்!!

574

CV.Vigneswaran

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்துக்கான முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாம் சண்டையிட்டு கொள்வோம் பின்னர் சேர்ந்துக் கொள்வோம். அடுத்த வீட்டுக்காரர் வந்து நீங்கள் விவாகரத்து பெறுங்கள் என்று கூறமுடியாது. அது உங்களுடைய பணியும் அல்லவென்று விக்னேஸ்வரன் திஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை டென்னிஸ் அரங்கில் உள்ள பந்தைப்போல பயன்படுத்துகின்றனர். ஒரு கட்சிக்காரர் குறித்த பந்தை மட்டையால் அடித்ததும் மற்றைய கட்சிக்காரர் அதனை அடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையின் பிரிவினையை கோரும் போது இலங்கையில் உள்ள சிங்கள சமூகம், இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரிந்து இந்தியாவுடன் சேர்ந்து விடுவார்களோ என்று அச்சப்படுவதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டமைக்கு பதற்றமான நடவடிக்கைகளே காரணம் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.