பிரபல நடிகை ஸ்ரீதேவி போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தினமும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி நேற்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவினர் சசிகலாவை சின்னம்மா என்று தலையில் வைத்து கொண்டாடி வருகின்ற நிலையில், தற்போது ஸ்ரீதேவி சசிகலாவை சந்தித்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






