அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும் இரு தினங்களாக சிறுவன் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று மாலை சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.