
இலங்கைப் பெண்களில் 25 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுகாதார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள எத்தனிக்கும் நபர்கள் ஏதேனும் ஓர் வகையிலான உளவியல் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. இலங்கையில் 100 பேர் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் அதில் பத்து பேர் முயற்சிப்பதாகவும் அதில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமூக அவதூறு, எதிர்பார்ப்பு தகறுதல், போதியளவு புரிந்துணர்வு இன்மை, பெற்றோர் ஆதரவு கிட்டாமை போன்ற காரணிகளினால் அதிகளவு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.





