தேர்தல் கடமைகளுக்காக 25 000 பொலிஸார் கடமையில்!!

439

election

எதிர்வரும் சனிக்கிழமை வட மேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கடமைகளுக்காக 25 000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மூன்று மாகாணங்களிலும் பொலிஸார் விசேட தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மாகாணத்தில் கடமையாற்றி வரும் அதிகாரிகளுக்கு மேலதிகமாக அண்டை மாகாணங்கள் மற்றும் கொழும்பிலிருந்தும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கடமைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.



எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கலகத் தடுப்புப் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.