மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்றும், அதற்கான தகவல்களை வெளியிடக்கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கௌதமி கடிதம் எழுதினார்.
இதன் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இந்நிலையில் தீபக் என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீபக் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அப்படியொரு கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு வரவில்லை என பதிலளித்துள்ளனர்.