ரயிலால் சிதைந்து போன 15 வயது சிறுமியின் வாழ்க்கை!!

688

15 வயது சிறுமி ஒருவர் தவறுதலாக ரயில் மாறி ஏறியதால் அவரின் வாழ்க்கையே சிதைந்து போனது பரிதாபத்தை எற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்த நித்யா என்ற 15 வயது சிறுமி கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் மூலம் சென்றார்.

ஆனால், அவர் தவறுதலாக டில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். அங்கு அவர் இறங்கியதும் உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும் அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அவர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர்கள், அந்த சிறுமியை 70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்தனர். சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், திருமணம் செய்ததுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து ஒருவழியாக தப்பிய அந்த சிறுமி ரயில் நிலையத்திற்கு தப்பி வந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். சராய் சலே கான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்ததுடன், தப்பி சென்ற மற்றவர்களை தேடி வருகின்றனர்.