சசிகலாவுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும், அவர் ஜெயலலிதாவின் வேலைக்காரி தான் என பிரபல நடிகை ரஞ்சினி கூறியுள்ளார்.
முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரஞ்சினி.
இவர் இன்று அளித்துள்ள பேட்டியில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக எப்படி ஏற்று கொள்ள முடியும்?
ஜெயலலிதாவுக்கு வேலைக்காரியாக இருந்ததை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி உள்ளது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியதை போல சசிகலாவுக்கு எதிராகவும் போராட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா எல்லாரையும் ஏமாற்றியது ஊரறிந்த விடயம் எனவும் ரஞ்சினி கோபமாக கூறியுள்ளார்.






