வவுனியாவில் உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழப்பு..!

476

accedent

வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இவர் இடம்பெயர்ந்து வவுனியாவில் வசித்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.