வவுனியா தரணிக்குளம் கனேஷ வித்தியாலயத்தின் 140 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ரூபா பெறுமதியான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவிகள் கொழும்பு றோட்டரிக் கிளாப்பினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
25 வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கு மூலம் 75 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு தவணைப் பரீட்சையில் 6 தொடக்கம் 13 வகுப்பு வரை முதலாம், இரண்டாம், மூன்றாம். அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் இ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, பிரதி அதிபர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.










