தங்கம் கடத்தல் – ஒரே மாதத்தில் 9வது நபர் கைது..!

511

arrest1இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இரு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 25 லட்சம் பெறுமதியான 106 கிராம் எடையுடைய தங்கம் மற்றும் 100 யூரோ பணமும் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இந்தியா – சென்னை நோக்கி பயணிக்கவிருந்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் மலவாயிலில் வைத்து தங்கத்தையும் மற்றையநபர் யூரோ பணத்தையும் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலவாயிலில் வைத்து தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இம்மாதம் மட்டும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.