வவுனியாவில் புதையல் தோண்டிய 9 பேருக்கு நேர்ந்த அவலம்!!

836

வவுனியா, பெரிய உலுக்குளம் புதுமடு குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெரிய உலுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம், கொல்லன்னாவ, மதவாச்சி் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.