
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் நோயாளியோடு அம்புலன்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பிரியன் திமோதி காடா ஜூனியர்(25).
கார்களை திருடுவதில் கில்லாடியான திமோதி பொலிசாரிடம் சிக்காமல் பலமுறை டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிலடெல்பியா நகரின் நெரிசலான போக்குவரத்து சாலையில் அம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு அவசரமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு சிக்னலில் சில வினாடிகள் நின்ற போது பிரியன் திமோதி துப்பாக்கி முனையில் அம்புலன்ஸ் டிரைவரை மடக்கி திருடி சென்றார். உடனடியாக தகவலறிந்த பொலிசார் நகர் முழுவதும் உஷார்படுத்தி பின் அம்புலன்சை சுற்றி வளைத்தனர்.
அப்போது அம்புலன்ஸை தாறுமாறாக ஓட்டியதில் உள்ளே இருந்த நோயாளி லேசாக காயம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.துப்பாக்கி முனையில் திமோதியை மடக்கி பிடித்த பொலிசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.





