நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

242

கம்பஹா ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கலால் திணைக்களத்தில் வாகன சாரதியாக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையென்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.