
ராமேஸ்வரத்தில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரண்டு இலங்கை அகதிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறும் போது மதுரை மாவட்டத்தின் மேலுர் அகதிகள் முகாமில் இருந்து அவர்கள் தப்பமுயன்ற போது அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
விசாரணையின் போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





