லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை : பறிபோனது பதவி!!

476

Lalu Prasad Yadav

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபா மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது.
இதில் அந்த மாநில முன்னாள் முதல்மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக 37 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்ற வழக்கில் ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 30ம் திகதி அன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் இன்னொரு முன்னாள் முதல்மந்திரி ஜெகன்நாத் மிஸ்ரா, ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பிரவாஸ் குமார்சிங் தீர்ப்பு அளித்தார்.