புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் முதலிடம் பெற்ற தனுராஜ் ஜனாதிபதியால் கௌரவிப்பு..!

473

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை மட்­டத்தில் அதிகூடிய 194 புள்­ளி­களைப் பெற்ற ஏழாலை சைவ சன்­மார்க்க வித்­தி­யா­லய மாண­வ­னான பரமானந்தம் தனுராஜ் நேற்று ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­ப­தி­யினால் பாராட்டிக் கௌர­விக்­கப்­பட்­டுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் அழைப்­புக்கு அமைய இவர் நேற்று முன்­தினம் புதன்கிழமை யாழ்ப்­பா­ணத்தில் இருந்து பெற்­றோ­ருடன் கொழும்­புக்கு சென்­றுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தின் வலி­காமம் கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட உடுவில் கல்விக் கோட்­டத்தை சேர்ந்த ­பா­ட­சாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 19 மாணவர்கள் ஜனாதிபதி மக்ந்த ராஜபக்சவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.



மாணவர்களுக்கு 1லட்சம் ரூபாவுக்குரிய மக்கள் வங்கி காசோலைகளும், சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

sc1 sc2