ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

389

rishabam

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்றிருப்பீர்கள். நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ராசியாதிபதியான சுக்கிரனின் சஞ்சாரம் தடைபட்ட பணம் கைக்கு கிடைக்கும்படிச் செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.

தன ஸ்தானத்தில் இருக்கும் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம்.

பணவரத்து அதிகரிக்க செய்யும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளை செய்வார். வெளிநாட்டிற்குச் செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.

சந்திராஷ்டம தினங்கள் : 11, 12 திகதிகளில் சுபகாரியங்கள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடவும். 11 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் ஸ்ரீப்ரக்ருத்யே நமஹ என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : அரளி மலரை அம்பாளின் அர்ச்சனைக்கு கொடுக்கவும். அவளின் அருட்பார்வையால் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். துன்பங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வெள்ளி.