சினிமா என்னை சிதைத்துவிட்டது : சன்னி லியோன்!!

421

நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரிவித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார்.

கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,  இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்­கி­றது.

நடிக்க வாய்ப்பு வேண்­டு­மானால் தயா­ரிப்­பா­ள­ருடன் ஒரு இரவு படுக்­கையை பகிர வேண்டும் என்றார்கள். நீ முடி­யாது என்றால் வேறு ஒரு­வ­ருக்கு இந்த வாய்ப்பு என்­றார்கள். இதை கேட்டு பாதி மன­தோடு பதில் சொல்­வ­தற்குள் உயிரே போய்­விட்­டது. இப்­படி உயிரை விட்டே சினி­மா­வுக்கு வந்தேன்.

நான் முதலில் கூச்ச சுபாவம் உள்­ள­வ­ளாக இருந்தேன். அங்கம் தெரி­யா­த­படி உடை அணிந்தேன். தற்போது அந்த வெட்கம், பயம் எல்லாம் எங்கே என்று தெரி­ய­வில்லை.

சினிமா நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நிறைய இழந்­து­விட்டேன். சினிமா என்னை சிதைத்­து­விட்­டது. விருப்­பமே இல்­லாமல் பட வாய்ப்­புக்­காக ஒரு­வ­ருடன் இருப்­பது கொடுமை. நான் இப்படி பளிச்சென்று பேசுவதால் சிலர் என்னை திட்டுகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள் என்கிறார் சன்னி லியோன்.