அடித்துக் கொலை செய்யப்பட்ட நடிகை!!

481

பிரபல நடிகை கிரித்திகா சவுத்ரி இரும்பு ஆயுதத்தால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஹரித்துவாரிலிருந்து மும்பையின் அந்தேரி பகுதியில் குடியேறிய கிரித்திகா சவுத்ரி, பொலிவுட் படங்களில் நடித்துள்ளார். மொடலிங்கும் செய்து வந்தவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், தலையின் வலப்பக்கத்தில் யாரோ அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் கிரித்திகாவை கொலை செய்த நபர் உடல் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்க ஏசியை ஒன் செய்துவிட்டு வந்ததும் தெரியவந்தது.

யார் அவர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.