வவுனியாவில் கடும் வறட்சி குடிதண்ணீர் தட்டுப்பாடு!!

948

vavuniya1

தொடர்ந்து நீடிக்கும் கடுமையான வறட்சி காரணமாக வவுனியாவில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

பருவகால மழை பெய்யுமென எதிர் பார்த்து பெரும்போகச் செய்கைக்கென வயல் நிலங்களை பயன்படுத்திய விவசாயிகள் நெல் விதைப்பை மேற்கொள்ள முடியாத நிலையில் அவஸ்த்தைப் படுகின்றனர்.

இதே வேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 24 பெரிய குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்ததால் கிணறுகள் வற்றிய நிலையில் கானப்படுகின்றன. இதனால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தமக்கு குடிதண்ணீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை குளங்களில் நீர் வற்றியதால் அங்கு காணப்பட்ட மீன்கள் இறந்து வருவதால் குளத்து மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்து மீன்களை வாங்கி சாப்பிடும் வறிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.