
வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள இந்துக்களின் வழிபாட்டிடம் தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் தமிழ் மக்களால் ஆல மரத்தின் கீழ் சிறிய கட்டட அமைப்புடன் வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த வழிபாட்டிடம் சேதப்படுத்த பட்டதுடன் இவ் இடத்தில் இருந்த சிலைகள் இனந்தெரியதாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது.
வழிபாட்டிடம் இருந்த மரமும் விசமிகளால் எரிக்கப்பட்டுள்ளது இச்செயல் இந்து மக்கள் மத்தியில் விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்செயலை இந்து சமய நிறுவனங்கள் கண்டித்துள்ளன.





