பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் 2வது நாளாகவும் தபால்துறை முடங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாக தாம் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று (27.06.2017) அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமான பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் 2வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து உப தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.
ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.













