வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் மாணிக்கவாசகர் குருபூசை தினம்!!

698

 
ஆனி மகம் மாணிக்கவாசகரின் குரு பூசை தினம். சமய குரவர்களின் வாழ்வியலை தமது வாழ்வுக்கு வழிகாட்டியாக பயன்படுத்தும் மூத்தோர்கள் அதிகம் உள்ள இல்லத்தில் நேற்று (28.06) மாவட்ட சமூகசேவை அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இங்கு இடம்பெற்றது.

‘யார்கொலோ சதுரர்’ என்ற தலைப்பில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன் மாணிக்கவாசகரின் வாழ்வியல் சாதனைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினர் .

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் எனும் கோட்பாட்டிற்கமைய பல பெரியவர்கள் அதன் பெருமைபற்றி தொடர்ச்சியாக பல கருத்துக்களை எடுத்து விளக்கினர் .நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் புன்னகை அமைப்பின் சார்பில் முதியோர் இல்ல முகாமையாளர் செல்வி பா.அகிலேஸ்வரி செல்வி மாருதி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இல்லம் சார்ந்த பல முதியவர்களும் மணிவாசகரின் திருவாசகத்தை பாடி மன அமைதி கண்டனர் .

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை புன்னகை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.செல்லம்மா ஜெகநாதன் அவர்களின் 65 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது மகன் சுஜன் ஜெகநாதன் இதற்கான நிதி உதவியை வழங்கி இருந்தார் . இறுதியில் நன்றியுரையை வசந்தன் வழங்கினார் .