வவுனியாவில் மூத்தோர்களுக்கான ஆத்மீக சுற்றுலா!!

1055

 
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மற்றும் சீட் நிறுவனத்துடன் இணைந்து மூத்தோர்களுக்கான ஆத்மீக சுற்றுலா பயணம் ஒன்றை இன்று (29.06) ஏற்பாடு செய்துள்ளது.

தரணிக்குளம், ஈச்சங்குளம், கோதண்டநொச்சிக்குளம், மறவன்குளம், கிடாச்சூரி, கருவேப்பங்குளம், தவசியார்குளம், அம்மி வைத்தான் குளம் கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூத்தோர்கள் இந்த ஆத்மீக சுற்றுலாவில் பங்குகொண்டனர்.

ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயம், மாமடு பௌத்த விகாரை, கல்வாரி தேவாலயம், சிவன் முதியோர் இல்லம், வவுனியா நகர சபை பூங்கா எனப் பல இடங்களுக்கும் இவர்கள் சென்று வழிபாடுகளிலும் சகோதர இனத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபட்டனர்.

இச்சுற்றுலா தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன்..

எமது முதியோர்கள் அவசர உலகில் பிள்ளைகளின் அன்பு, அரவணைப்பு, அவர்களுடனான பொழுது போக்குகளை மேற்கொள்ளல் என்பன அருகிவரும் நிலையில் வடமாகாண சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் முதியோர்களை இவ்வாறான சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வது வழமையாக மாறிவிட்டது. இது முதியோர் நலனுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது என தெரிவித்தார்.

இந்த சுற்றுலாவில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் உள்ளூராட்சித்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் விஸ்வலிங்கம் ஜெயசோதி மாவட்ட அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வஸந்தன், செல்வி தி.கலைவாணி சீட் நிறுவன உத்தியோகத்தர்கள் செல்வி சுமதி திருமதி வனிதா, செந்துஜன், சுதர்சன் திருமதி சுஜாதா, டிலானி, தனுஜன் ஆகியோரும் இச்சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளனர்.