வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் காரியாலயத்தை முற்றுகையிட்ட சுகாதாரத் தொண்டர்கள்!!

527

 
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நேற்றைய தினம் (29.06) மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் சுகாதாரத் தொண்டர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று (30.06) அமைச்சரின் காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இருந்தபோதும் நேற்றையதினம் அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடைபெறவில்லை என வடமாகாண சுகாதார அமைச்சரால் சுகாதார தொண்டர்களுக்கு சொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 தொடக்கம் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் (30.06..2017) 58 வது நாளாக தொடரும் நிலையில் வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.

அரசாங்கத்தின் குறைந்த தகுதியாக தரம் பத்தில் நான்கு பாடங்கள் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். அந்தவகையில் வடக்கு சுகாதாரத் தொண்டர்களில் 910 பேரில் 150 சுகாதாரத் தொண்டர்கள் மாத்திரமே தகுதி பெற்றுள்ளதாகவும், ஆகவே ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் விசேட அமைச்சரவையின் அங்கிகாரத்தினூடாக அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டளையினூடாக அனைத்து தொண்டர்களையும் உள்வாங்குவதற்கும் உத்தேசித்துள்ள நிலையில் கூட்டம் நடைபெறாமையினால் முடிவுகள் எட்டப்படவில்லை என தெரிவித்தார்.