வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (06.07) இரவு 11 மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
நேற்று இரவு 11 மணியளவில் உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் மதுபோதையில் நின்ற இளைஞர்கள் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஒரு மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றுள்ளது. பின்னர் பொலிசார் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து பொலிசார் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறைப்பாடுகளும் மேற்கொள்வில்லை.
எனினும் ஆலயத்தில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கமராவில் பொலிசார் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






