ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழன்!!

624

22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியுள்ளது. நேற்றைய போட்டியில், பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்.

அதன் பின்பு நடந்த ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தமிழகத்தைச் சார்ந்த லக்ஷ்மணன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கவுடாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வெள்ளிப் பதக்கமும் , நயனா ஜேம்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அனு ராணி வெண்கலம் வென்றார்.

முதல் நாளான நேற்று இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று ஒட்டு மொத்தமாக ஏழு பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனா இரண்டு தங்கம் ஒரு வெள்ளி எனப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

45 நாடுகளைச் சார்ந்த 655 வீரர்கள் இந்த தடகள போட்டியில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.