பழமையான தொல்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராகவும் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியா – மாமடு, அக்போவவில் மிகவும் பழமையான மயானம் ஒன்றுள்ளது. இது தொல்பொருள் திணைக்களத்தாலும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மயானப் பகுதியில் காணப்பட்ட தேக்கு மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கை கடந்த மே மாதம் நடைபெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கனரக இயந்திரங்களினால் தொல்பொருட்கள் உடைக்கப்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் திணைக்களம் எடுக்காமையினாலேயே போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.













