வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் காரணமாக நகர்ப் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை ஒன்று இன்று (12.07) மாலை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா பொது சுகாதார பணிமனையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நகர்ப் பகுதியில் அமைத்துள்ள பாடசாலைகள், பள்ளிவாசல், வாகனங்கள் திருத்தும் இடங்கள், கடைகள் என்பனவற்றுக்கு அருகில் நுளம்பு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டன. இதன்போது மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.











