வவுனியா கனகராயன்குளத்தில் வீதித் திருத்த ஆரம்பப் பணிகள்!!

570

 
கனகராயன்குளத்தில் உள்ள பளைய கண்டிவீதி பலவருடகாலமாக திருத்தம் செய்யப்படாமல் இருந்தபோது வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா மற்றும் இ.இந்திரராசா ஆகிய இருவரின் வேண்டுதலுக்கமைவாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்தக வாணிப கிராமிய அபிவிருத்தி வீதி அபிவிருத்தி மோட்டார் போக்குவரத்து அமைச்சரான பா.டெனீஸ்வரனால் மேற்படி வீதியை அமைச்சு நிதிமூலம் திருத்தம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி வீதிக்கான திருத்தவேலையின் ஆரம்பநாளான 11.07.2017ம் திகதி அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பா.டெனீஸ்வரன் திருத்தத்திற்கான கல்லுவைத்து ஆரம்பித்து வைத்தார்.

இன்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவின் செயலாளரான த.சிவஞானம், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள் மற்றும் வீதி திருத்த வேலையைசெய்யும் ஒப்பந்தகாரர் மற்றும் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்தபிரதிநிதிகளும் கலந்துகொண்டு வீதி திருத்தவேலையினை ஆரம்பித்து வைத்தார்கள்.