வவுனியாவில் இளைஞர்கள் மோதல் : 4 பேர் காயம்!!

603

வவுனியாவில் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து 4 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செட்கட்டிபிலவு பகுதியில் இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இறுதியில் மோதலாக மாறியுள்ளது.

இதில் புதிய கோவில்குளத்தைச் சேர்ந்த அ.மயூரன்(28), பி. சுவிதரன்(27), கே.இந்திரன்(27), கேதங்கீதன்(24) ஆகியோர் மீது கம்பி, தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் குறித்த நால்வர் காயமடைந்ததையடுத்து, தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இத்தாக்குதல் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.