மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற தொனிப்பொருளுடன் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா இந்திரன்ஸ் உணவக மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைச் செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலே கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து “சுப்பற்ற கொல்லை” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.







