வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (21.07.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிலின் சாரதி இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















