மட்டக்களப்பில் இளைஞன் ரயிலுடன் மோதி தற்கொலை!!

505

train

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயதான விஜி சிரான் என்ற இளைஞனே தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியால் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்