குடித்து விட்டு தந்தை செய்த செயல் : உயிரிழந்த இரண்டு மகள்கள்!!

519

குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது இரு மகள்களையும் செங்கலால் அடித்து கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்தவர் முகேஷ் யாதவ் (40), இவர் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார்.

இதன் பின்னர், முகேஷின் மனைவி அவருக்கு உணவு பரிமாறி கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த முகேஷ் மனைவியை அடித்துள்ளார், இதை கண்டு பயந்து போன அவரின் 5 மற்றும் 3 வயதுடைய இரு மகள்கள் தாயின் அருகில் அழுத நிலையில் சென்றுள்ளனர்.

இருவரையும் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற முகேஷ் செங்கல்லை எடுத்து மகள்களை அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் முகேஷை கைது செய்தார்கள்.

முகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.