இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை மீனவர்கள் 26 பேர் இந்திய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியா குமரியில் வைத்து ஏழு படகுகளுடன் இந்த மீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று தூத்துக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிங்கள மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





