மனிதக் கழிவுகளை உண்ண வைத்து பெண்ணை துன்புறுத்திய உறவினர்கள்!!

659

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவரை சூனியக்காரி என முத்திரை குத்தி அவரது உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கேக்ரி பகுதியில் கடந்த 3ஆம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.

40 வயதான பெண்மணியை அடித்து துன்புறுத்திய அவரது உறவினர்கள் மனித கழிவுகளை உண்ணும்படி நிர்பந்தித்துள்ளனர்.

அவரை சூனியக்காரி என முத்திரை குத்திய உறவினர்கள் பின்னர் அடித்தே கொலை செய்துள்ளனர். 6 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்துள்ளனர்.

காசநோய் காரணமாக கடந்த மாதம் குறித்த பெண்ணின் கணவர் மரணமடைந்துள்ளார், இதனால் தமது மகள் மற்றும் மகனுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பில் இந்த விவகாரம் தொடர்பில் புகார் வந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண்மணியின் பேரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைதான 6 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.