நடு வீதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!!

551

 
இந்தியாவில் பெண் ஒருவர் நடு வீதியில் குழந்தை பெற்றேடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியின் Mau மாவட்டத்தின், Ailakh கிராமத்தைச் சேர்ந்தவர் வசுந்தரா. கர்ப்பிணியான இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்புலன்சில் வசுந்தரா பெற்றோருடன் சென்றுள்ளார். மருத்துவமனை அருகே அடைந்தவுடன், உள்ளே இருக்கும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை சார்பில் யாரும் உதவிக்கு வராததால், நடுரோட்டில் குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மருத்துவமனை அருகே வந்தவுடன் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் நான் சுயநினைவை இழக்கும் அளவிற்கு சென்று விட்டதாகவும், ஆனால் இதை அறிந்தும் மருத்துவமனை ஊழியர்கள் உதவ முன்வராத காரணத்தினால், தானே மருத்துவமனைக்கு நடந்து சென்றதாக கூறினார்.

அப்போது நான் முழுமையாக சுயநினைவை இழந்துவிட்டதால், அங்கிருந்த சாலையிலே படுத்துவிட்டதாகவும், அப்போது குழந்தை பிறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

குழந்தை பிறந்ததை அறிந்த மருத்துவமனை உடனடியாக வந்து குழந்தையின் பிறப்பை பதிவு செய்துவிட்டதாகவும், அதன் பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரின் தந்தை கூறியுள்ளார்.

கோரக்பூரில் அண்மையில் தான் அரசால் நடத்தப்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர்.

குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒக்சிஜன் குழாய் சிகிச்சைக்கு இல்லாததே அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.