இப்படியும் ஒரு திருடனா?

566

கேரளாவில் வீட்டில் திருடிய பொருட்களை அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டு கடிதம் ஒன்றையும் அதில் வைத்துவிட்டு சென்றுள்ளார் திருடன்.

திருவனந்தபுரத்தில் உள்ள நஸீம் என்பவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ள நஸீம், தனது வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளையும் அளித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை எஸ் அருண் என்பவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இதனைப்பார்த்த திருடன் தான் திருடிய பொருட்கள் அனைத்தையும் நஸீம் வீட்டில் வைத்துவிட்டு ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தையும் அதில் வைத்துள்ளான்.

அந்த கடிதத்தில், நான் ஒரு மாணவன், என்னை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து அந்த வீடியோவை நீக்கிவிடுமாறு பொலிசிடம் கூறுங்கள்.

இல்லையெனில், நிலுவையில் உள்ள அத்தனை வழக்குகளையும் என் மீது போட்டு விடுவார்கள், அந்த பதட்டமே என்னை கொன்று விடும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த திருடனை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.